Friday, November 21, 2008

கெஞ்சுகின்றது...




உன் வெட்க விழிகளோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் பிஞ்சு இதழ்களோ
கொஞ்சுகின்றது
வேண்டும் என்று
யார் சொல்லைத் தான்
கேட்பது இப்போது...?



நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?



நான் எத்தனை
முத்தம் தந்தேன்
நீ ஒரே ஒரு முத்தம் தான்
தருகிறாய் என்றால்
நீ கொடுத்த தெல்லாம்
சில்லரை முத்தம்
நான் கொடுத்தது
மொத்த முத்தம்
என்று சிரிக்கிறாய்...


இருந்தாலும்
இவ்வளவு அழுத்தமாக வெல்லாம்
முத்தமிட்டிருக்கக் கூடாது
பிறகென்னா,
உனது அடுத்த முத்தத்தையும்
இதே அழுத்தத்தோடு அல்லவா
எதிர் பார்க்கின்றன
என் இதழ்கள்….


நீ முத்தமிட
ஆரம்பித்ததும் தான்
நம்  இமைகள் நான்கும்
தாமாக மூடிக் கொள்கின்றனவே
பிறகு ஏனடி
விளக்கை வேறு
அணைக்கச் சொல்கிறாய்....?


48 comments:

வால்பையன் said...

குழந்தையின் அசைவுகளை இப்படியும் மொழி பெயர்க்கலாமோ!

நன்றாக இருந்தது!

நட்புடன் ஜமால் said...

//உன் வெட்க விழிகளோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் பிஞ்சு இதழ்களோ
கொஞ்சுகின்றது
வேண்டும் என்று
யார் சொல்லைத் தான்
கேட்பது இப்போது...?
//

உன் பிஞ்சு இதழ்களோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் வெட்க விழிகளோ
கொஞ்சுகின்றது
வேண்டும்

இப்படித்தான்ப்பா எனக்கு தோனுது

தமிழ் அமுதன் said...

கலக்கல்! முத்தம் கொடுத்தே பேர் வாங்கின
அந்த கமல ஹாசனுக்கு கூட இப்படியெல்லாம்
தோனி இருக்காது!

தமிழ் தோழி said...

//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//

இந்த வரிகள் மிகவும் அருமை.
இந்த கவிதையில் உங்களுடைய காதல் தெரிகிறது.அதிலும் அந்த புகைப்படம் மிகவும் அருமை.

ஜீவன் அண்ணா நீங்களும் கலக்கிட்டீங்க.

Poornima Saravana kumar said...

ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ?????


//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது..

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...
ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ?????


//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது.\\

நல்லா கேளூங்க எல்லோரும்.
வண்டி வண்டியா அனுபவம் வச்சிக்கிட்டு - அத வீட பெருசா பொய் சொல்றது - எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு.

ஹைய்யா மாட்டி உட்டாச்சி.

அருள் said...

அனுபவம் பேசுகிறது...

முத்தம் மொத்தமாய்... பதிவாக.
சபாஸ் தோழா...
உங்கள் தொண்டு தொடர்க.

Divyapriya said...

nalla irukku :))

தமிழன்-கறுப்பி... said...

ஆடுங்க அடிச்சு ஆடுங்க..:))

தமிழன்-கறுப்பி... said...

என்ஜொய்...;)

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...!

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ?????


//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது.\\

நல்லா கேளூங்க எல்லோரும்.
வண்டி வண்டியா அனுபவம் வச்சிக்கிட்டு - அத வீட பெருசா பொய் சொல்றது - எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு.

ஹைய்யா மாட்டி உட்டாச்சி.//

வாங்க ஜமால்.. இன்னும் பெரிய கூட்டனியா சேர்த்து கிட்டு புதியவனைப் போட்டு தாக்கலாம்:)))

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ?????


//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது.\\

நல்லா கேளூங்க எல்லோரும்.
வண்டி வண்டியா அனுபவம் வச்சிக்கிட்டு - அத வீட பெருசா பொய் சொல்றது - எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு.

ஹைய்யா மாட்டி உட்டாச்சி.//

வாங்க ஜமால்.. இன்னும் பெரிய கூட்டனியா சேர்த்து கிட்டு புதியவனைப் போட்டு தாக்கலாம்:)))\\

நிச்சையமா.

வேற யாரு யாரு வற்றங்க.

நட்புடன் ஜமால் said...

முத்தங்கள் இட்ட கிறகத்தில்
மொத்தமா உறங்கிட்டாரா நம்ம புதியவர்.

இன்னாBA ஆளையே கானோம்.

இன்னும் பல முத்தங்களை ... கத்துக்கிட்டு இருக்காறோ, இல்ல கத்து கொடுட்துக்கிட்டு இருக்காறோ.

Princess said...

"நீ முத்தமிட
ஆரம்பித்ததும் தான்
நம் இமைகள் நான்கும்
தாமாக மூடிக் கொள்கின்றனவே
பிறகு ஏனடி
விளக்கை வேறு
அணைக்கச் சொல்கிறாய்....? "

ரொம்பவும் ரசித்தேன் உங்கள் கவிதைகளை,..அழகு

RAMYA said...

//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நண்பரே அருமையான கற்பனை, ரசனை. போதும் தூங்குவது போல் நடிப்பதை விடுங்கள்.

ரம்யா

நாணல் said...

:))

புதியவன் said...

//வால்பையன் said...
குழந்தையின் அசைவுகளை இப்படியும் மொழி பெயர்க்கலாமோ!

நன்றாக இருந்தது!//

வாங்க வால்பையன்

நன்றாக இருந்ததா நன்றி.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
//உன் வெட்க விழிகளோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் பிஞ்சு இதழ்களோ
கொஞ்சுகின்றது
வேண்டும் என்று
யார் சொல்லைத் தான்
கேட்பது இப்போது...?
//

உன் பிஞ்சு இதழ்களோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் வெட்க விழிகளோ
கொஞ்சுகின்றது
வேண்டும்

இப்படித்தான்ப்பா எனக்கு தோனுது//

வாங்க அதிரை ஜமால்

உங்களுக்கும் இப்படியெல்லாம் தோனுதா ?

வருகைக்கு நன்றி.

புதியவன் said...

//ஜீவன் said...
கலக்கல்! முத்தம் கொடுத்தே பேர் வாங்கின
அந்த கமல ஹாசனுக்கு கூட இப்படியெல்லாம்
தோனி இருக்காது!//

வாங்க ஜீவன்

என்னங்கண்ணா நம்ம இடத்துக்கு கமல ஹாசனைல்லாம் கூட்டிட்டு வந்துட்டீங்க
அவரெல்லாம் சூப்பர் சீனியருங்க அவருக்கு முழு நேரப்பொழுது போக்கே இது தாங்க நம்மலெல்லாம் வெறும் தியரி மட்டும் தாங்க அதுவும் தியரிலயே பார்டர்ல தான் பாஸ் பண்ணுவோம் அவரு பிரக்ட்டிக்கல்லயே சென்ட்டம் அடிக்கிற ஆளுங்க தயவு செய்து அவரோடவெல்லாம் கம்பேர் பண்ணாதிங்கண்ணா...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//

இந்த வரிகள் மிகவும் அருமை.
இந்த கவிதையில் உங்களுடைய காதல் தெரிகிறது.அதிலும் அந்த புகைப்படம் மிகவும் அருமை.

ஜீவன் அண்ணா நீங்களும் கலக்கிட்டீங்க.//

வாங்க தமிழ் தோழி

புகைப்படத்தைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
தங்கள் வருகைக்கு நன்றி.

புதியவன் said...

//PoornimaSaran said...
ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ????//

வாங்க பூர்ணிமா சரண்

ஏங்க ஏதோ ஒரு குழந்தை தெரியாத்தனமா எழுதிடுச்சு அதுக்காக இப்படியெல்லாமா கேள்வி கேக்குறது. பாருங்க குழந்தை பயந்திருச்சி...

//நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது..//

உண்மையச் சொன்னா இந்த உலகம் என்னிக்குத்தான் உடனே நம்பி இருக்கு
இந்த பூமி உருண்டைன்னு சொன்னத நம்பிச்சா இல்ல பூமி தான் சூரியன சுத்துதுன்னு சொன்னத நம்பிச்சா...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ஏங்க புதியவன் ஒரு வேளை நீங்க கிஸ்ஸாலஜி படிச்சிருக்கீங்களோ?????


//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நல்லா நடிசிங்க:):)
கேட்டா கற்பனை அனுபவம்னு காதுல பூ சுத்தரது.\\

நல்லா கேளூங்க எல்லோரும்.
வண்டி வண்டியா அனுபவம் வச்சிக்கிட்டு - அத வீட பெருசா பொய் சொல்றது - எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு.

ஹைய்யா மாட்டி உட்டாச்சி.//

ஏங்க ஜமால் ஏனிந்த கொலைவெறி ?

புதியவன் said...

//அருள் said...
அனுபவம் பேசுகிறது...

முத்தம் மொத்தமாய்... பதிவாக.
சபாஸ் தோழா...
உங்கள் தொண்டு தொடர்க.//

வாங்க அருள்

முத்தம் மொத்தமாய்..ஆகா எதுகை மோனைல அசத்துறீங்க அருள். வருகைக்கு நன்றி.

புதியவன் said...

//Divyapriya said...
nalla irukku :))//

நல்லா இருக்கா நன்றி திவ்யப் ப்ரியா.

புதியவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
ஆடுங்க அடிச்சு ஆடுங்க..:))

November 22, 2008 5:34 PM


தமிழன்-கறுப்பி... said...
என்ஜொய்...;)

November 22, 2008 5:35 PM


தமிழன்-கறுப்பி... said...
நல்லாருக்கு...!//

வாங்க தமிழன்

உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கமான பின்னுட்டத்திற்க்கும் நன்றி தமிழன்.

புதியவன் said...

//// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...

வாங்க ஜமால்.. இன்னும் பெரிய கூட்டனியா சேர்த்து கிட்டு புதியவனைப் போட்டு தாக்கலாம்:)))//

ஆகா...ஒரு க்ரூப்பாத் தான்யா வந்திருக்குறாங்க ?

புதியவன் said...

//\\ PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
வாங்க ஜமால்.. இன்னும் பெரிய கூட்டனியா சேர்த்து கிட்டு புதியவனைப் போட்டு தாக்கலாம்:)))\\

நிச்சையமா.

வேற யாரு யாரு வற்றங்க.//

ஒரு முடிவு பண்ண மாதிரித் தான் தெரியுது ?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
முத்தங்கள் இட்ட கிறகத்தில்
மொத்தமா உறங்கிட்டாரா நம்ம புதியவர்.

இன்னாBA ஆளையே கானோம்.

இன்னும் பல முத்தங்களை ... கத்துக்கிட்டு இருக்காறோ, இல்ல கத்து கொடுட்துக்கிட்டு இருக்காறோ.//

ஏங்க இப்பிடி ?

நாங்கள்லாம் இன்னும் பிரிகேஜியே தாண்டல நீங்க இந்த விசயத்துல யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டுன்னு கேள்விப்பட்டேன் உண்மையா ?

புதியவன் said...

// ஸாவரியா said...
"நீ முத்தமிட
ஆரம்பித்ததும் தான்
நம் இமைகள் நான்கும்
தாமாக மூடிக் கொள்கின்றனவே
பிறகு ஏனடி
விளக்கை வேறு
அணைக்கச் சொல்கிறாய்....? "

ரொம்பவும் ரசித்தேன் உங்கள் கவிதைகளை,..அழகு//

வாங்க ஸாவரியா

ரொம்பவும் ரசிச்சீங்களா ?
நன்றிங்க உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்.

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
முத்தங்கள் இட்ட கிறகத்தில்
மொத்தமா உறங்கிட்டாரா நம்ம புதியவர்.

இன்னாBA ஆளையே கானோம்.

இன்னும் பல முத்தங்களை ... கத்துக்கிட்டு இருக்காறோ, இல்ல கத்து கொடுட்துக்கிட்டு இருக்காறோ.//

ஏங்க இப்பிடி ?

நாங்கள்லாம் இன்னும் பிரிகேஜியே தாண்டல நீங்க இந்த விசயத்துல யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டுன்னு கேள்விப்பட்டேன் உண்மையா ?\\

ஏதோ சதி நடக்குது.
நம்ளப்பத்தி யாருப்பா புரளியா கிளப்பி உட்ரது.

(யப்பா உனக்கு தெரிந்த உண்மையை இப்படியா போட்டு உடைக்கிறது)

யாருப்பா அங்க - எல்லாம் கிளம்பு கிளம்பு,

புதியவன் said...

// RAMYA said...
//நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?//


நண்பரே அருமையான கற்பனை, ரசனை. போதும் தூங்குவது போல் நடிப்பதை விடுங்கள்.

ரம்யா//

வாங்க ரம்யா

நீங்களாவது கற்பனைன்னு சொன்னீங்களே
நன்றி ரம்யா.

புதியவன் said...

// நாணல் said...
:))//

வாங்க நாணல்

நன்றி உங்கள் வருகைக்கும் அளவான தருகைக்கும்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
முத்தங்கள் இட்ட கிறகத்தில்
மொத்தமா உறங்கிட்டாரா நம்ம புதியவர்.

இன்னாBA ஆளையே கானோம்.

இன்னும் பல முத்தங்களை ... கத்துக்கிட்டு இருக்காறோ, இல்ல கத்து கொடுட்துக்கிட்டு இருக்காறோ.//

ஏங்க இப்பிடி ?

நாங்கள்லாம் இன்னும் பிரிகேஜியே தாண்டல நீங்க இந்த விசயத்துல யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டுன்னு கேள்விப்பட்டேன் உண்மையா ?\\

ஏதோ சதி நடக்குது.
நம்ளப்பத்தி யாருப்பா புரளியா கிளப்பி உட்ரது.

(யப்பா உனக்கு தெரிந்த உண்மையை இப்படியா போட்டு உடைக்கிறது)

யாருப்பா அங்க - எல்லாம் கிளம்பு கிளம்பு,//

அப்பாடா இப்பவாவது உண்மை உலகத்துக்கு தெரிஞ்சுதே...

நட்புடன் ஜமால் said...

Me 35 வா

நட்புடன் ஜமால் said...

\\நண்பரே அருமையான கற்பனை, ரசனை. போதும் தூங்குவது போல் நடிப்பதை விடுங்கள்.

ரம்யா//

வாங்க ரம்யா

நீங்களாவது கற்பனைன்னு சொன்னீங்களே
நன்றி ரம்யா\\

ரம்யா கற்பனைன்னா சொன்னீங்க.

நீங்க அவ்வளவு நல்லவங்களா - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
Me 35 வா//

ஆமாங்கோ... ஆமாங்கோ...நன்றிங்கோ...

Unknown said...

முத்தக்கவிதைகள் மொத்தமும் அழகு :))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
முத்தக்கவிதைகள் மொத்தமும் அழகு :))//

வாங்க ஸ்ரீமதி

மொத்தமும் அழகா இருக்கா ரொம்ப நன்றிங்க.

Anonymous said...

:)

புதியவன் said...

//Thooya said...
:)//

வாங்க தூயா

உங்கள் வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றி.

RAMYA said...

//

அதிரை ஜமால் said...
\\நண்பரே அருமையான கற்பனை, ரசனை. போதும் தூங்குவது போல் நடிப்பதை விடுங்கள்.

ரம்யா//

வாங்க ரம்யா

நீங்களாவது கற்பனைன்னு சொன்னீங்களே
நன்றி ரம்யா\\

ரம்யா கற்பனைன்னா சொன்னீங்க.

நீங்க அவ்வளவு நல்லவங்களா - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
நான் ரொம்பாஆஆஆஆஆஅ நல்லவங்க, நானு ரொம்பாஆஆஆஆஆஆ வல்லவங்க்கோ, அது தெரியாதா, ஹையோ ஹையோ !!

ரம்யா

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
இனிமையான கவிதை...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
இனிமையான கவிதை...//

வாங்க து. பவனேஸ்வரி

கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

Natchathraa said...

முத்தக்கவி வித்தகரா நீங்க???

:-))

இந்த குட்டி குட்டி கவிதைகள் அழகோ அழகு...

நீங்க தேர்வு செய்யும் படங்கள் ரொம்பவே அழகாயிருக்குங்க....

புதியவன் said...

//Natchathraa said...
முத்தக்கவி வித்தகரா நீங்க???

:-))

இந்த குட்டி குட்டி கவிதைகள் அழகோ அழகு...

நீங்க தேர்வு செய்யும் படங்கள் ரொம்பவே அழகாயிருக்குங்க....//

காதலின் மிகச் சிறந்த பரிசு...அதை ஏதோ எனக்குத் தெரிஞ்ச வார்த்தைகள்ல எழுதி விடுகிறேன் அவ்வளவே...நன்றி நட்சத்ரா...

Sakthidevi.I said...

nice pictures..nice poetry..

புதியவன் said...

//sathya said...
nice pictures..nice poetry..//

நன்றி சத்யா...