Friday, November 14, 2008

என்ன பதில் சொல்ல....?



சமைக்கத் தெரியும் என்கிறாய்
துவைக்கத் தெரியும் என்கிறாய்
வீட்டை அழகு படுத்தத் தெரியும்
என்கிறாய்.
ஆனால்,
முத்தமிடத் தெரியாது என்கிறாய் எப்படி ?
நான் இதற்கு முன் சமைத்திருக்கிறேன்
துவைத்திருக்கிறேன் 
வீட்டை அழகு படுத்தியிருக்கிறேன்
அதனால் தெரியும்
ஆனால்,  
இது வரை யாரையும்
முத்தமிட்டதில்லை
அதனால் தெரியாது என்கிறாய் !
மேலும் உனக்கு முத்தமிடத்தெரியுமா ?
என்று என்னை வேறு கேட்கிறாய்
இதற்கு நான் என்ன பதில் சொல்ல....?

17 comments:

நட்புடன் ஜமால் said...

கேட்டால் பதில் சொல்லு ba,
வாயால் சொல், சத்தமில்லாமல் சொல் ;)

தமிழ் அமுதன் said...

இந்தமாதிரி கேள்விகேட்டா?
மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதுதான்
இல்லாட்டி ''ஜமால்'' சொல்லுரதுபோல
செய்ய வேண்டியதுதான்.

Poornima Saravana kumar said...

உண்மையை சொல்லுங்க ஸார்..

புதியவன் said...

வாங்க ஜீவன், ஜமால், பூர்ணிமா சரண்

சொல்லிட்டேன்
சொல்லிட்டேன்
சொல்லிட்டேன்

எனக்குத் தெரியாது என்று !
எனக்கு மட்டும் தெரியுமா என்ன ?

நட்புடன் ஜமால் said...

அட புதியவரே இப்படி அப்பட்டமா சொல்லலாமா ...

என்ன ஜீவன், பூர்ணிமா சரண் - என்ன பன்னலாம் புதியவரை

Unknown said...

:)))

Anonymous said...

நல்லாயிருக்கு :-)

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
:)))//

வருகைக்கு நன்றி.

புதியவன் said...

//இனியவள் புனிதா said...
நல்லாயிருக்கு :-)//

வாங்க இனியவள் புனிதா.

நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்.

நாணல் said...

:) chance eh illai ponga... ippadi ellam kooda yosikka mudiyuma?

புதியவன் said...

// நாணல் said...
:) chance eh illai ponga... ippadi ellam kooda yosikka mudiyuma?//

முடியுதே முடியுதே இப்படிக் கூட யோசிக்க முடியுதே. வாங்க நாணல் வருகைக்கும் குறும்பான தருகைக்கும் நன்றி.

Maddy said...

சொல்லி தராமல் கற்று கொள்வதில் முத்தமும் ஒரு வகை. இது கற்று கொண்டு பின்னர் படிக்கும் வகை. சீக்கிரம் ஆகட்டும்

புதியவன் said...

//Maddy said...
சொல்லி தராமல் கற்று கொள்வதில் முத்தமும் ஒரு வகை. இது கற்று கொண்டு பின்னர் படிக்கும் வகை. சீக்கிரம் ஆகட்டும்//

வாங்க Maddy

உங்கள் வருகைக்கும் குறும்பான தருகைக்கும் நன்றி.

து. பவனேஸ்வரி said...

பாவங்க நீங்க....

புதியவன் said...

// து. பவனேஸ்வரி said...
பாவங்க நீங்க....//

வாங்க து. பவனேஸ்வரி

உங்களுக்காவது தெரிந்ததே....

Sakthidevi.I said...

:-)

azhakaga yosuchu ezhuthirukeenga...

புதியவன் said...

// sathya said...
:-)

azhakaga yosuchu ezhuthirukeenga...//

நன்றி...