Thursday, November 13, 2008

எவ்வளவு வித்தியாசம்


என் பாட்டி எப்போதும்
சூடான உணவை சாப்பிட்டு
நான் பார்த்ததில்லை
கேட்டேன் ஏன் பாட்டி
உன் வாழ் நாளில் ?
நீ இது வரை சூடாக
எதையுமே சாப்பிட்டதில்லையா
சாப்பிட்டு இருக்கிறேன்
என் கல்யாணத்துக்கு முன்னாடி
பிறகு ஏன்
இப்ப சாப்பிடுவதில்லை ?
என் மனசுக்குள்ள தான்
உங்க தாத்தா இருக்குறாக
நான் சூடா சாப்பிட்டா
அவங்களுக்கு சுட்டுடுமேன்னு தான்
சொல்லும் போது பாட்டி
முகத்துல அப்படியொரு வெட்கம்
இதை கேட்டதும் எனக்கு
சிரிப்பு தான் வந்தது...
வெட்கத்திற்கு ஏது வயது
எந்த வயசுலயும் வெட்கம்
அழகாய்த்தான் இருக்கும்
இப்போது
உன்னுடன் பழகிய பிறகு
என்னை அறியாமலேயே
நான் சூடான
உணவுகளைத் தவிர்க்கிறேன்
இப்போதும் எனக்கு
சிரிப்பு தான் வருகிறது
என் மனதுக்குள்
ஆனால்,
அந்த சிரிப்பிற்கும்
இந்த சிரிப்பிற்கும் தான்
எவ்வளவு வித்தியாசம்
பாட்டி சொல்லும் போது
வேடிக்கையாய்த் தெரிந்தது
எனக்கென்று வரும் போது மட்டும்
எவ்வளவு பவித்ரமானதாய்த் தெரிகிறது....!?

10 comments:

நட்புடன் ஜமால் said...

எப்பா நீ சரியான பா(ர்)ட்டி தான்.

நல்ல கதை சொல்ற. உன் பாட்டி சொல்லி கொடுத்த கதைகளோ.

இருக்கும் இருக்கும் ...

Poornima Saravana kumar said...

ஒரு வேலை அனுபவமா இருக்குமோ???

தமிழ் அமுதன் said...

நான் சூடான
உணவுகளைத் தவிர்க்கிறேன்
இப்போதும் எனக்கு
சிரிப்பு தான் வருகிறது

வெட்கம் ? வரலையா ?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
எப்பா நீ சரியான பா(ர்)ட்டி தான்.

நல்ல கதை சொல்ற. உன் பாட்டி சொல்லி கொடுத்த கதைகளோ.

இருக்கும் இருக்கும் ...//

வாங்க ஜமால்

ஏங்க பாட்டிகள் எப்பவுமே வடை சுட்ட கதையத்தான் சொல்லனுமா என்ன...?
நன்றி ஜமால்

புதியவன் said...

//என் பதிவுகள்/en pathivugal said...
ஒரு வேலை அனுபவமா இருக்குமோ???//

வாங்க பூர்ணிமா சரண்

நீங்க சொல்றது உண்மை தாங்க, இது என் கற்பனையின் அனுபவம் தாங்க...
வருகைக்கு நன்றி...

புதியவன் said...

//ஜீவன் said...
நான் சூடான
உணவுகளைத் தவிர்க்கிறேன்
இப்போதும் எனக்கு
சிரிப்பு தான் வருகிறது

வெட்கம் ? வரலையா ?//

வாங்க ஜீவன்
இல்லீங்க பாட்டிக்கு தாங்க வெட்கம் வந்தது.
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி ஜீவன்.

Sakthidevi.I said...

paattita vera ethuvum kekalaiya ? :-) this is also nice..

புதியவன் said...

//புதியவன் said...
//sathya said...
paattita vera ethuvum kekalaiya ? :-) this is also nice..//

எனக்கு பாட்டியெல்லாம் இல்லை சத்யா...ஒரு நண்பர் விளையாட்டாக சொன்ன தலைப்பிற்காக எழுதியது இது...//

Sakthidevi.I said...

:-) oh....ok innumn neraiya ezhuthunga...aduththa thalaippu enna?

புதியவன் said...

//sathya said...
:-) oh....ok innumn neraiya ezhuthunga...aduththa thalaippu enna?//

இப்போதெல்லாம் பதிவை எழுதிவிட்டுத் தான் தலைப்பை முடிவு செய்கிறேன்...உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி சத்யா...