Thursday, November 6, 2008

என்ன பேசிக்கொள்ளும்...




ஊரெல்லாம் காதல் மழை பெய்யும் போது
என்ன தான் நீ குடை பிடித்துச் சென்றாலும்
மழைச் சாரல் உன்னைத் தொடாமல் விடாது...


மழை வரும் போலிருக்கிறது
மறக்காமல் குடை எடுத்துப்போ
பிறகு,
நீ நனையும் அழகைப் பார்த்து
மழைக்குக் காய்ச்சல் 
வந்துவிடப் போகிறது...



எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
இறைவனிடம் வேண்டுகிறேன்
என் காதலைத் தாங்கும்
இதயத்தை என்னவளுக்குக் கொடு...



பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
பேசாமல் கொல்கின்றன
உன் இதழ்கள்...



உன் மௌனமும்
என் மௌனமும்
சந்தித்துக் கொள்ளும்போது
என்ன பேசிக்கொள்ளும்...!

9 comments:

நட்புடன் ஜமால் said...

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

nice thoughts and nice collections.

புதியவன் said...

/அதிரை ஜமால் said...
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

nice thoughts and nice collections.//

உண்மைதான்

”இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை”

தங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி.

Princess said...

"மழை வரும் போலிருக்கிறது

மறக்காமல் குடை எடுத்துப்போ

பிறகு,

நீ நனையும் அழகைப் பார்த்து

மழைக்குக் காய்ச்சல்

வந்துவிடப் போகிறது..."

இந்த கவிதை தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! மழைன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். இப்படி நானும் ஒரு கவிதை எழுதிருக்கேன்,..அப்பறமா பிளாகுல போடுறேன்,..உங்களுக்கும் பிடிக்கும்

புதியவன் said...

//ஸாவரியா said...
"மழை வரும் போலிருக்கிறது

மறக்காமல் குடை எடுத்துப்போ

பிறகு,

நீ நனையும் அழகைப் பார்த்து

மழைக்குக் காய்ச்சல்

வந்துவிடப் போகிறது..."

இந்த கவிதை தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! மழைன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். இப்படி நானும் ஒரு கவிதை எழுதிருக்கேன்,..அப்பறமா பிளாகுல போடுறேன்,..உங்களுக்கும் பிடிக்கும்//

வாங்க ஸாவரியா

உங்களுக்கும் மழை பிடிக்குமா !?
நானும் உங்க கவிதைய ரசிக்க ஆவலா இருக்கிறேன். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Unknown said...

:))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
:))//

நன்றி ஸ்ரீமதி வருகைக்கும் உங்கள் தருகைக்கும்.

Sakthidevi.I said...

மழை வரும் போலிருக்கிறது

மறக்காமல் குடை எடுத்துப்போ

பிறகு,

நீ நனையும் அழகைப் பார்த்து

மழைக்குக் காய்ச்சல்

வந்துவிடப் போகிறது...









எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

இறைவனிடம் வேண்டுகிறேன்

என் காதலைத் தாங்கும்

இதயத்தை என்னவளுக்குக் கொடு...

nalla varigal...

ungal tharpodhaiya kavidhaiyai padikka aarambiththu ,mudhalil irunthu padiththu kondu irukiren..

nanraaga ezhuthugireergal....

periya ezhuththaalaraaga vara enathu vaazhthukal...

புதியவன் said...

//sathya said...

nalla varigal...

ungal tharpodhaiya kavidhaiyai padikka aarambiththu ,mudhalil irunthu padiththu kondu irukiren..

nanraaga ezhuthugireergal....

periya ezhuththaalaraaga vara enathu vaazhthukal...//


என்னுடைய முதல் பதிவிலிருந்து தற்போதைய பதிவு வரை பொறுமையாக படித்து அனைத்திற்க்கும் கருத்திட்டதற்கு மிக்க நன்றி...உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டுமொரு நன்றி சத்யா...

sundar said...

nice lines it is very beautifull