Wednesday, November 26, 2008

இன்னும் ஒலிக்கிறது...


தெருவெங்கும்
வாகன இரைச்சல்
பக்கத்து வீட்டுக்
குழந்தையின்
வீரிட்ட அழுகை
எதிர் வீட்டுச்
சிறுவர்களின்
விளையாட்டுச்
சிரிப்பொலி
சுழற்றி அடிக்கும்
காற்றில் ஜன்னலின்
க்ரீச் சத்தம்
வானொலியில் சுதாரகுநாதன்
இவையெல்லாம் தாண்டி
இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....



இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...