Thursday, July 30, 2015

சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்




நடவாத கனவல்ல
தாங்கள்
நடவு செய்தது
காலம்
அழிக்க முடியா
கனவுகளை
விதைத்துச் சென்றதால்
கலாம் என்ற பெயரும்
காலத்தால் அழிக்க
இயலாத
கல்வெட்டாயிற்று


தங்களின் வெள்ளை மனம் கண்டு
வெள்ளை மாளிகையும்
தன் கொடி தாழ்த்தி
அஞ்சலி
செலுத்துகிறது


யாதொரு சொத்துக்களையும்
தாம்
சேர்த்து வைக்கவில்லை
என்பதால்
நம் தேசத்தின்
விலைமதிப்பற்ற
சொத்தாயானீர்கள்


தாம் வாழ்ந்த காலத்தில்
நாங்களும்
வாழ்ந்தோம்
என்பதை
எங்கள் சந்ததிகளுக்கு
பெருமையோடு
நினைவூட்டப்போவதை
நினைத்து
சிறிது கர்வம்
கொள்கிறோம்


இணையற்ற
இறைவனின்
இதயத்தில்
இளைப்பாரட்டும்
தங்களின்
இன்னுயிர்...




                                        
                                         சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்...


1 comment:

Unknown said...

நல்லாதோர் கவியாக்கம், தனித்துவமான எழுத்துநடை, தொடர்க