Thursday, October 30, 2008

என் முதல் பதிவு


என் வலைப்பக்க முதல் பதிவாக உங்க நேரத்த வீணாக்காம ஒரு ரெம்பச் சின்ன காதல் கதை.

ஒரு வரம்பு மீராத இளம் காதலர்கள்.

காதலிக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் காதலனோ 

நம்மள மாதிரி சுட்டுப் போட்டாலும் கவிதை வராது

காதலனுக்கு ரெம்ப நாளா ஒரு ஆசை, . காதலிகிட்டே ஒன்னு கேக்கணும்னு. ஆனா அவகிட்ட எப்படி கேக்கிறதுன்னு அவனுக்கு தயக்கம்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாம ரகசியமா ஒரு காகிதத்துல அவனோட ஆசைய ஆறே வரிகள்ல எழுதி. அவனோட காதலி தனியா இருக்கிறப்ப

அவ கிட்ட கொடுக்கிறான். அத படிச்சிட்டு அவ என்ன பண்ணினாங்கிறத எல்லாம்

நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க.

ஆனால்,

அந்த காதலன் யாருக்குந்தெரியாம ரகசியமா எழுதின காகிதத்தோட ஒரு நகல் (Copy) மட்டும் என் கிட்ட இருக்கு அது உங்களுக்காக இதோ...

 

முத்தமெனும் பூவெடுத்து

முள்ளுகளை சிக்கெடுத்து

அத்தனையும் சரம் தொடுத்து

மொத்தமுமாய் உனக்களித்து

முத்தம் பெற ஆசையடி

உன் இதழ் முத்தம் பெற ஆசையடி....


15 comments:

ஆ.ஞானசேகரன் said...

முயற்சி செய்தால் முடியும், தொடர்ந்து எழுதுங்கள் புதியவன்...

அன்புடன் அருணா said...

எழுதுங்க..எழுதுங்க...இப்பிடிக் கதையெல்லாம் எழுதாமலே கவிதை எழுதலாமே???
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

புதியவன் said...

//முயற்சி செய்தால் முடியும், தொடர்ந்து எழுதுங்கள் புதியவன்...//

வாங்க ஆ.ஞானசேகரன் தங்களுடை முதல் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி

புதியவன் said...

//aruna said...
எழுதுங்க..எழுதுங்க...இப்பிடிக் கதையெல்லாம் எழுதாமலே கவிதை எழுதலாமே???
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா//

தங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி அருணா.
கதையில்லாமல் கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
கொஞ்சம் வசன நடையா இருக்கும் பரவாயில்லையா ?

நட்புடன் ஜமால் said...

முதல் பதிவு அழகா வந்திருக்கு.

கவிதைக்காக எழதப்பட்ட கதை போல் உள்ளது.

தொடரட்டும் உங்கள் பனி.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
முதல் பதிவு அழகா வந்திருக்கு.

கவிதைக்காக எழுதப்பட்ட கதை போல் உள்ளது.

தொடரட்டும் உங்கள் பணி.//

வாங்க அதிரை ஜமால்

உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

நன்றி

நவீன் ப்ரகாஷ் said...

வருக.. வருக... :))

வலையுலகில் காலடி எடுத்துவைத்திருக்கும்
புதியவனுக்கு மேன்மேலும் பல புதியபடைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்....!!!

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
வருக.. வருக... :))

வலையுலகில் காலடி எடுத்துவைத்திருக்கும்
புதியவனுக்கு மேன்மேலும் பல புதியபடைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்....!!!//

வாங்க கவிஞரே உங்கள் வரவினால் என் வலைத்தளம் பெருமையடைகிறது.
உங்கள் வாழ்த்துக்களுக்கு இந்தப் புதியவனின் நன்றிகள்...வருகைக்கு நன்றி நவீன்.

Natchathraa said...

அட இவ்வளோ அழகா கவித்துவமான கதை எழுதிட்டு கவிதை வராதுன்னு சொல்லிட்டீங்களே....

//முத்தமெனும் பூவெடுத்து
முள்ளுகளை சிக்கெடுத்து அத்தனையும் சரம் தொடுத்து மொத்தமுமாய் உனக்களித்து முத்தம் பெற ஆசையடி உன் இதழ் முத்தம் பெற ஆசையடி....//

நிச்சயம் அந்த காதலனுக்கு
இதழ் முத்தம் நெற்றியில் கிடைச்சுருக்குமே....
கிடைச்சுதா???

;-))

உங்கள் மொத்த வலைப்பூவினையும் படிச்சு முடிச்சாச்சு.... ரொம்பவும் அழகாயிருக்கு... இன்னைக்கு முழுவதும் நல்ல பனிப்படர்ந்த மலைப்பிரதேசத்துக்கு போயிட்டு வந்த உணர்வு....கவிதைகளின் குளுமை மனதை வருடுகிறது....

வாழ்த்துகள் புதியவன்....
இன்னும் மென்மேலும் நிறைய கவிதைகள் தந்திடனும்....

புதியவன் said...

//Natchathraa said...
அட இவ்வளோ அழகா கவித்துவமான கதை எழுதிட்டு கவிதை வராதுன்னு சொல்லிட்டீங்களே....

//முத்தமெனும் பூவெடுத்து
முள்ளுகளை சிக்கெடுத்து அத்தனையும் சரம் தொடுத்து மொத்தமுமாய் உனக்களித்து முத்தம் பெற ஆசையடி உன் இதழ் முத்தம் பெற ஆசையடி....//

நிச்சயம் அந்த காதலனுக்கு
இதழ் முத்தம் நெற்றியில் கிடைச்சுருக்குமே....
கிடைச்சுதா???

;-))

நானும் கிடைத்திருக்கும்னு தான் நினைக்கிறேன்...ஏதுக்கும்...அந்த காதலனிடம் கேட்டு சொல்கிறேனே...

உங்கள் மொத்த வலைப்பூவினையும் படிச்சு முடிச்சாச்சு.... ரொம்பவும் அழகாயிருக்கு... இன்னைக்கு முழுவதும் நல்ல பனிப்படர்ந்த மலைப்பிரதேசத்துக்கு போயிட்டு வந்த உணர்வு....கவிதைகளின் குளுமை மனதை வருடுகிறது....

வாழ்த்துகள் புதியவன்....
இன்னும் மென்மேலும் நிறைய கவிதைகள் தந்திடனும்....//

என் வலைப்பூவின் அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துக்களையும் சொன்னதற்கு நன்றிகள்...என்னுடைய எழுத்துக்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே...மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்...நன்றி நட்சத்ரா...

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

Sakthidevi.I said...

nice

Sakthidevi.I said...

nice starting..

புதியவன் said...

// நாமக்கல் சிபி said...
சூப்பர்!//

வருகைக்கு மிக்க நன்றி சிபி...

புதியவன் said...

//sathya said...
nice starting../

உங்கள் வருகையும் அழகு தான் நன்றி சத்யா...